மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு அருகில் புத்தர் சிலை!

மன்னார் திருக்கேதீஸ்வரத்திற்க்கு அண்மையாக சிறீலங்காப்படையினரால் பௌத்த ஆலயம் நிர்மாணிக்க பட்டுள்ளமையால் அங்கு வாழும் மக்களிடையே பெரும் அச்ச நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இரவுடன் இரவாக சுமார் 1500 கிலோ நிறையுடய வெண்கலத்திலான புத்தர் சிலை படையினரால் கொண்டு வந்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் போயா தினமான நேற்றைய முன்தினம் பிரித்தோதி புத்தர் கோவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தனியார் காணியில் நிலை கொண்டுள்ள படையினர் தமது வழிபாட்டுக்காக சிறியளவிலான் புத்தர் சிலை ஒன்றினை வைத்து வழிபாட்டில் ஈடுபட்டு வந்தார்கள்.இந்நிலையில் தற்போது திடீரென பாரிய புத்தர் சிலையை வைத்து பௌத்த ஆலயத்தை நிர்மாணித்துள்ளதுடன் காவல்துறையினர்மற்றம் படையினரின் பாதுகாப்புடன் குறித்த புத்தர் சிலையை பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் தீர்த்தக்ககரையான பாலாவிக்கு அண்மையாக இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதுகுறிப்பாக இந்தப் பகுதியில் பௌத்த மத்ததவர்கள் யாரும் வாழாத நிலையில் இத்தகைய பௌத்த ஆலயத்தை படையினர் கட்டியுள்ளமையும் மற்றும் தனியார் காணியை அத்து மீறிப் பிடிக்கும் நடவடிக்கைகளும் தி்ட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை அரசினால் மேற்கொள்வதற்கான முன்செயற்பாட்டு நடவடிக்கையாக மக்கள் பார்க்கின்றார்கள்.
Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!