மட்டு. இல் சேதமாக்கப்பட்ட மகாத்மா காந்தியின் சிலை புனரமைப்பு!

மட்டக்களப்பில் கடந்த வெள்ளிக்கிழமையன்று உடைத்து சேதப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தியின் உருவச் சிலை மீளவும் புனரமைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு காந்திசேவா அமைப்பின் தலைவர் ஏ.செல்வேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தியின் உருவச்சிலை சேதப்படுத்தப்பட்டமை தொடர்பில் மட்டக்களப்பு காந்தி சேவா அமைப்பின் சார்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. பின்னர் மட்டக்களப்பு பொலிஸார் இந்த உருவச்சிலையை பார்வையிட்ட பின்னர் அதனை புனரமைப்புச் செய்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!