தனது வாய் மூலம் குழந்தைக்கு உணவு ஊட்டும் வினோத பெண்! (வீடியோ & படங்கள்)

நீங்கள் அனைவரும் குழந்தையாக இருக்கும் போது உங்கள் தாய் தனது அன்புக்கைகள் மூலம் உணவு ஊட்டியிருப்பாள். அல்லது கரண்டி மூலம் உணவு ஊட்டியிருப்பாள். இதுவே உலகில் அனைத்து தாய்மார்களும் கடைப்பிடிக்கும் முறை என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆனால் வழமைக்கு மாறான தாய்மைக்கு புறம்பாக ஒரு தாய் தனது பச்சிளம் குழந்தைக்கு வித்தியாசமான முறையில் உணவு ஊட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது:-

பிரபல நடிகையான பஅலிசியா சில்வர்ஸ்டேனோ என்பவர் தனது 11 மாதங்களே ஆன ஆண்குழந்தைக்கு தனது வாய்மூலம் உணவு ஊட்டி வருகிறார். இம்முறை பறவைகளில் மட்டும் காணப்படும் ஒரு முறையாகும். பொதுவாக பறவைகளே அதிகம் தனது குஞ்சுக்கு இரை தேடி அந்த இரையை தனது வாயில் இருந்து நேரடியாக குஞ்சுக்கு ஊட்டுகிறது. இருந்து ஒரு மனித இனம் இப்படி செய்வது இதுவே முதல் தடவையாக காணப்படுகிறது. இதனால் பலரின் சர்ச்சைக்கு இவர் ஆளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது பற்றி வைத்தியர்களும் குறித்த பெண்மணிக்கு எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது பற்றி வைத்தியர்கள் குறிப்பிடுகையில் பொதுவாக பெரியவர்களின் வாயில் பாரியளவு தொற்றுக்கிருமிகள் இருக்கக்கூடும். இவ்வாறு சிறு குழந்தைக்கு உணவு கொடுக்கும் போது நேரடியா கிருமி சிறுவனின் உடலுக்குள் வாய் மூலமாக பரவ அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றது. எனவே இம்முறை சுகாதாரத்திற்கு முற்றிலும் புறம்பான ஒரு முறையாகும் என யெனிபர் எனும் சுகாதார வைத்தியர் ஒருவர் குறிப்பிட்டார்.


WATCH VIDEO CLICK HERE!
Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!