வாத்துகளுடன் வாக்கிங் போகும் கோழிகள்

வாத்து முட்டை என்று தெரியாமலேயே கோழி அடைகாத்தது. அதில் இருந்து வெளியேறிய வாத்துக் குஞ்சுகளோடு கோழி ஆசையோடு வலம் வரும் சுவாரஸ்ய சம்பவம் இங்கிலாந்தில் நடக்கிறது. இங்கிலாந்தின் டார்சட் கவுன்டியில் உள்ள பூலே பகுதியில் பிலிப் பால்மர் என்பவர் பண்ணை வைத்திருக்கிறார்.

ஹில்டா என்ற பெயரிட்டு ஒரு கோழியை வளர்த்து வருகிறார். அது ஒரு மாதமாக 5 முட்டைகளை அடைகாத்து வந்தது. சமீபத்தில் அவை பொரிந்தன. 5 முட்டையில் இருந்தும் வெளியேறியது.. கோழிகள் அல்ல, வாத்துக் குஞ்சுகள். சிறிது நேரம் பேந்தப் பேந்த விழித்தது கோழி. அதற்கு பிறகு, தனது குஞ்சுகளாகவே நினைத்து வாத்துக் குஞ்சுகளை அரவணைத்துக் கொண்டது.

பண்ணை முழுவதும் வாத்துக் குஞ்சுகள் கூடவே சுற்றித் திரிகிறது. வாத்துக் குஞ்சுகளுடன் கோழி பாசத்துடன் பழகுவதை அப்பகுதியினர் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். இதுபற்றி பால்மர் கூறுகையில், இப்போது வாத்துக் குஞ்சுகளும் கோழியும் ஒன்றாக சுற்றுவது பார்க்க அழகாக இருக்கிறது. வாத்துக் குஞ்சுகள் நீந்த ஆரம்பிக்கும் வரை இந்த உறவு தொடரும். ஒருநாள் அவை ஓடையில் இறங்கும்போது, கோழி தயங்கி கரையில் நிற்கும். நாம் அம்மா , குஞ்சுகள் இல்லை என்ற உண்மை அவற்றுக்கு அப்போதுதான் தெரியும் என்றார்.
Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!