மனிதர்களை மரணிக்கமால் வாழவைக்க முடியும் : புதிய தகவல்!

மனிதர்களை மரணிக்கமால் வாழவைக்க முடியும் : புதிய தகவல்! இறக்காமல் தொடர்ந்து வாழ பலருக்கு பிடித்திருக்கும், பிறந்தவர்கள் அனைவரும் ஒருநாள் இறந்தே ஆகவேண்டும் என்ற நியதியில் இருந்து இதுவரை யாராலும் தப்ப முடியவில்லலை. ஆனால் முடியும் என்று சொல்கிறார் 31 வயதாகும் இட்ஸ்கொஃப் என்ற இளைஞன்.


இதற்காக அவதார் ஸ்டைலில் ஓர் திட்டத்தை தீட்டியிருக்கிறார். என்னவென்றால், செயற்கையாக தயாரிக்கப்பட்ட உடலினுள் குறித்த மனிதனின் எண்ணங்களை மாற்றிவிடுவதுதான். இதற்கான ஆராட்சியில் சுமார் 100 விஞ்ஞானிகளை ஈடுபடுத்தப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ் ஆராட்சிக்காக அமெரிக்க ராணுவத்தின் Defense Advance Research Projects Agency உடன் சேர்ந்து பணியாற்ற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். தனது கணிப்பின்படி இத்திட்டத்துக்கு 10 ஆண்டுகள் போதுமெனவும் தெரிவிக்கிறார். இது நடைமுறைக்கு சாத்தியப்படுமா, இல்லை கதைக்கு மட்டும் தானா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!